#IPL2021Auction ஐபிஎல் வரலாற்றில் உச்சபட்ச விலைக்கு விலைபோன வெளிநாட்டு வீரர்.! கிறிஸ் மோரிஸ் புதிய சாதனை

First Published Feb 18, 2021, 4:31 PM IST

கிறிஸ் மோரிஸை ரூ.16.25 கோடி என்ற அதிகபட்ச தொகைக்கு அவரை எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
 

ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலம் சென்னையில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மேக்ஸ்வெல்லை ரூ.14.25 கோடிக்கு ஆர்சிபி அணியும், மொயின் அலியை ரூ.7 கோடிக்கு சிஎஸ்கேவும் ஏலத்தில் எடுத்தன. ஸ்டீவ் ஸ்மித்தை டெல்லி கேபிடள்ஸும், ஷகிப் அல் ஹசனை கேகேஆர் அணியும் ஏலத்தில் எடுத்தன.
undefined
ஆர்சிபி அணியால் கழட்டிவிடப்பட்ட தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் அவரது அடிப்படை விலையான ரூ.75 லட்சத்திற்கு ஏலத்தில் விடப்பட்டார். ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டரான மோரிஸ் மீது மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி ஆகிய அணிகள் ஆர்வம் காட்டின. ஆனால் அவரை உச்சபட்சமாக ரூ.16.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
undefined
மோரிஸுக்கு இந்த தொகை மிக அதிகமானதுதான். இதன்மூலம் ஐபிஎல்லில் அதிகபட்ச விலைக்கு விலைபோன வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை கிறிஸ் மோரிஸ் படைத்துள்ளார். ஆனால் இவ்வளவு பெரிய தொகைக்கு தகுதியான வீரர் மோரிஸ் கிடையாது என்பதே நிதர்சனம்.
undefined
click me!