"இக்குழுவிற்கு விமானத் தரவு, காக்பிட் குரல் பதிவுகள், விமானப் பராமரிப்புப் பதிவுகள், ஏடிசி பதிவுகள் மற்றும் சாட்சி வாக்குமூலங்கள் உள்ளிட்ட அனைத்து பதிவுகளையும் அணுகும் உரிமை உண்டு" என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குழு தனது அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் வெளியிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த குழுவுக்கு உள்துறை செயலாளர் தலைமை தாங்குவார் என்றும், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், இந்திய விமானப்படை மற்றும் விமானப் போக்குவரத்து நிபுணர்களின் பிரதிநிதிகள் இக்குழுவில் இடம் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழு அமைக்கப்பட்டதன் நோக்கம், விபத்தின் மூல காரணத்தை கண்டறிவதே என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்களைத் தடுக்கத் தேவையான மேம்பாடுகளைப் பரிந்துரைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சம்பவங்களைத் தடுப்பது மற்றும் கையாளுவது தொடர்பான சர்வதேச தரத்திலான சிறந்த நடைமுறைகளையும் இக்குழு பரிந்துரை செய்யும்.