நியூசிலாந்துக்கு எதிரான ஓடிஐ தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்கள் சிலருக்கு ஓய்வளிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு, ஹர்திக் பாண்டியா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு இந்தத் தொடரில் ஓய்வளிக்கப்பட வாய்ப்புள்ளது.
தேர்வாளர்கள் இந்த இரண்டு வீரர்களும் ஐந்து டி20 போட்டிகளுக்கும், பின்னர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் உலகக் கோப்பைக்கும் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
பும்ராவின் உடற்தகுதி
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு, ஹர்திக் பாண்ட்யா உடற்தகுதிப் பிரச்சினைகள் காரணமாக ஒரு ஒருநாள் போட்டியிலும் விளையாடவில்லை. ஜஸ்பிரித் பும்ராவும் ஓடிஐ போட்டிகளில் அதிகம் விளையாடவில்லை. அவரது பணிச்சுமை மிகவும் கவனமாக நிர்வகிக்கப்படுகிறது, டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு 50 ஓவர் வடிவத்தில் அவர் அதிகமாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.