அவங்க 2 பேருல ஒருத்தர தூக்கிட்டு ரிஷப் பண்ட்டை டீம்ல சேருங்க..! முன்னாள் ஜாம்பவான் அதிரடி

First Published Jan 24, 2021, 2:23 PM IST

இந்திய ஒருநாள் அணியில் சஞ்சு சாம்சன் அல்லது ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரில் ஒருவரை நீக்கிவிட்டு ரிஷப் பண்ட்டை சேர்க்குமாறு ஆஸி., முன்னாள் வீரர் பிராட் ஹாக் கருத்து தெரிவித்துள்ளார்.
 

தோனிக்கு அடுத்து இந்திய அணியின் விக்கெட் கீப்பராக முன்னுரிமை கொடுத்து அனைத்துவிதமான போட்டிகளிலும் ஆடவைக்கப்பட்ட ரிஷப் பண்ட், தொடர் சொதப்பலால் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் வாய்ப்பை இழந்தார். கேஎல் ராகுலே விக்கெட் கீப்பிங்கும் செய்துவருகிறார்.
undefined
இந்நிலையில், ஐபிஎல்லில் சொதப்பினாலும், ஆஸி., சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரில் 2 மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடினார் ரிஷப் பண்ட். சிட்னி டெஸ்ட்டில் 97 ரன்கள் அடித்து இந்திய அணி போட்டி டிரா செய்ய உதவிய ரிஷப் பண்ட், கடைசி டெஸ்ட்டின் கடைசி இன்னிங்ஸில் 89 ரன்கள் அடித்து இந்திய அணியை வெற்றி பெற செய்தார். ரிஷப் பண்ட்டின் அபாரமான பேட்டிங்கால் தான், கடைசி நாளில் பிரிஸ்பேன் டெஸ்ட்டில் ஆஸி.,யை வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் வென்றது.
undefined
இந்நிலையில், ரிஷப் பண்ட்டை ஒருநாள் மற்றும் டி20 அணிகளிலும் சேர்க்க வேண்டும் என பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிராட் ஹாக், ரிஷப் பண்ட்டின் தன்னம்பிக்கையும் ஆட்டமும் மேம்பட்டுள்ளது.
undefined
டெஸ்ட் தொடரில் 2 மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடி அவரது திறமையை நிரூபித்துள்ளார். இதைவிட இந்தியாவுக்கு சிறந்த இன்னிங்ஸை ஆஸ்திரேலியாவில் ஆடிவிட முடியாது. எனவே ஒருநாள் அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் அல்லது சஞ்சு சாம்சன் ஆகிய இருவரில் ஒருவரை நீக்கிவிட்டு, ரிஷப் பண்ட்டை சேர்க்க வேண்டும். அதன்மூலம் ஆல்ரவுண்டர் ஆப்சன் கிடைக்கும் என்று பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
undefined
click me!