டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், ஐசிசி விதிகளின்படி போட்டியை உறுதி செய்ய இந்திய அணி கொழும்பு செல்கிறது.
பிப்ரவரி 15 ஆம் தேதி கொழும்புவில் நடைபெறவிருக்கும் இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்த போதிலும், போட்டியில் இருந்து விலகப் போவதில்லை என்பதில் பிசிசிஐ உறுதியாக உள்ளது. கேப்டன் சூர்யகுமார் யாதவும் இதனை மீண்டும் உறுதிபடுத்தி உள்ளார்.
25
இந்தியா ஏன் கொழும்பு செல்கிறது?
ஐ.சி.சி விதிகளின்படி, ஒரு அணி குறிப்பிட்ட ஒரு போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்தாலும், எதிரணி வெற்றி பெற விரும்பினால், அவர்கள் சரியான நேரத்தில் மைதானத்திற்கு வர வேண்டும். இதற்கான தேவையான நடைமுறைகளின் ஒரு பகுதியாக இந்திய அணி கொழும்புக்கு விமானத்தில் செல்கிறது.
35
எல்லாம் திட்டமிட்டபடி நடக்கும்
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி நடக்காவிட்டாலும், திட்டமிட்டபடி இந்திய அணி கொழும்பு சென்று தங்கும். போட்டிக்கு முந்தைய பயிற்சி மற்றும் செய்தியாளர் சந்திப்புகளிலும் அணி பங்கேற்கும். கொழும்பில் இந்திய கேப்டன் போட்டிக்கு வருவார். டாஸ் போடும்போது பாகிஸ்தான் கேப்டன் வரவில்லை என்றால், போட்டி நடுவர் இந்தியாவை வெற்றியாளராக அறிவிப்பார்.
டாஸ் போடுவதற்கு பாகிஸ்தான் அணி வரவில்லை என்றால், இந்திய அணிக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும். பாகிஸ்தான் தோல்வியடைந்ததாகவும் அறிவிக்கப்படும். போட்டியைப் புறக்கணித்தால் பாகிஸ்தானின் நெட் ரன் ரேட் பாதிக்கப்படும். போட்டியிட்டு தோற்றால்கூட ரன் ரேட்டை மேம்படுத்த வாய்ப்புள்ளது. ஆனால் புறக்கணித்தால் நெட் ரன் ரேட் பூஜ்ஜியமாகும்.
55
பிசிசிஐயின் நிலைப்பாடு
ஐசிசி உடன் இணைந்து போட்டியின் கண்ணியத்தை காப்போம் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார். அரசியல் காரணங்களுக்காக விலகுவதை ஏற்க முடியாது எனவும் பிசிசிஐ கூறியுள்ளது.