இந்திய அணி தரப்பில் வெறும் 8 பந்துகள் மட்டுமே வீசிய வாஷிங்டன் சுந்தர் 3 ரன் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அக்சர் படேல், ஷிவம் துபே தலா 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, பும்ரா தலா 1 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் ஜொலித்த அக்சர் படேல் ஆட்டநாயகன் விருது வென்றார்.
தொடரை கைப்பற்றுமா இந்தியா?
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 5வது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் 8ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றலாம்.