நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டம் மற்றும் ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் சூப்பர் பேட்டிங்கால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 238 என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. கேப்டன் சூர்யகுமார் 22 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 32 ரன்கள் எடுத்தார்.
ரிங்கு சிங் மின்னல் ஆட்டம்
ஹர்திக் பாண்ட்யா 16 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 25 ரன்கள் எடுத்தார். இறுதியில், இடது கை பேட்ஸ்மேன் ரிங்கு சிங் 20 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் விளாசினார். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபி சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.