நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி நாளை இந்தூரில் தொடங்கும் நிலையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சூர்யகுமார், ''ஒரு தொடரில் நாங்கள் விளையாடும் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானது. அதில் இருந்து ஏதாவது கற்றுக்கொள்ள முயற்சிக்கிறோம்.
நான் வலைப்பயிற்சியில் நன்றாக பேட்டிங் செய்து வருகிறேன். ரன்களைப் பற்றி பேசினால், அது நிச்சயம் வரும். ஆனால் அதே நேரத்தில், நான் வித்தியாசமாக எதையும் செய்ய முடியாது. எனது அடையாளத்தை மாற்ற விரும்பவில்லை.
கடந்த 3-4 ஆண்டுகளில் எனக்கு வெற்றியைத் தந்தது எதுவோ, அதே வழியில் பேட்டிங் செய்ய விரும்புகிறேன். செயல்திறன் வந்தால், அதை ஏற்றுக்கொள்வேன். வரவில்லை என்றால், மீண்டும் திட்டமிட்டு, பயிற்சி செய்து, கடினமாக உழைத்து, வலுவாகத் திரும்புவேன்" என்று தெரிவித்துள்ளார்.