ஐபிஎல் 2020: ரெய்னா இல்லாதது கூட பரவாயில்ல.. சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பிரச்னையே இதுதான்
First Published Sep 12, 2020, 5:37 PM ISTஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளான மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் மீண்டும் ஒருமுறை கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளன. முதல் போட்டியிலேயே சிஎஸ்கேவும் மும்பை இந்தியன்ஸும் தான் மோதுகின்றன. ஐபிஎல் ஜுரம் தொடங்கிவிட்ட நிலையில், ரசிகர்கள் ஐபிஎல் தொடக்கத்திற்காக ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில், பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட தோனி தலைமையிலான சிஎஸ்கே அணிக்கு, இந்த சீசனில் பெரும் சிக்கலாக இருக்கப்போவது எது என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.