சிஎஸ்கே போட்டியை பார்க்க வந்த ரசிகர்களிடம் 36 செல்போன்கள் திருட்டு – 8 பேர் கொண்ட வடமாநில கும்பல் கைது!

Mobile Theft at CSK vs RCB IPL 2025 Match : சென்னை சூப்பர் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது செல்போன் திருடிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

36 Mobile Phones Stolen During IPL Match – 8 People Arrested! ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழா தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்த ஆண்டுக்கான பிளே ஆஃப் அணிகளை கணிக்க முடியாதபடி ஒவ்வொரு அணியும் சிறப்பாக விளையாடி வருகின்றன. மேலும், ஒவ்வொரு அணியிலும் அனுபவ வீரர்களை விட இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றன. இந்த நிலையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கோட்டையான சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது செல்போன் திருடிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

IPL 2025, CSK vs RCB

கடந்த மார்ச் 28ஆம் தேதி எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 8ஆவது லீக் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி ஆர்சிபி பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக ரஜத் படிதார் 51 ரன்கள் எடுத்தார்.

தவறுகளை திருத்திக் கொண்டு வெற்றி பெறுமா மும்பை இந்தியன்ஸ் – 2 தோல்வி, 3 போட்டியில் வெற்றி கிடைக்குமா?
 


CSK vs RCB, IPL 2025

கடின இலக்கை துரத்திய சிஎஸ்கே அணியானது 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் குவித்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதில், ரச்சின் ரவீந்திரா 41 ரன்கள் குவித்தது. தோனி 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அறிமுக போட்டியிலேயே மும்பைக்கு உயிர்கொடுத்த இளம் வீரர்! யார் இந்த அஸ்வனி குமார்?
 

Chennai Super Kings vs Royal Challengers Bengaluru

தற்போது வரையில் சிஎஸ்கே விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது. ஆர்சிபி விளையாடிய 2 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது. இதே போன்று டெல்லி கேபிடல்ஸ் விளையாடிய 2 போட்டியிலும் வெற்றி பெற்று நெட் ரன் ரேட் அடிப்படையில் 2ஆவது இடத்தில் உள்ளது.

KKR கதையை முடித்த அறிமுக வீரர் அஸ்வனி குமார்! மும்பை இந்தியன்ஸ் முதல் வெற்றி!
 

CSK VS RCB, IPL 2025

இந்த நிலையில் தான் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி போட்டியின் போது 36 செல்போன்கள் திருடிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். CSK vs RCB போட்டியை பார்க்க வந்தவர்களிடமிருந்து 36 செல்போன்கள் திருடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சிறுவர்கள் உள்பட 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து 36 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!