ஒருபோதும் வீட்டில் துடைப்பம் வைக்கும்போது.. இந்த தவறுகளை செய்யாதீங்க! தீராத பணக்கஷ்டம் வரலாம்..

First Published May 10, 2023, 6:50 PM IST

வாஸ்துவின்படி, வீட்டில் துடைப்பம் வைக்கும்போது செய்யும் சில தவறுகள் பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும். 

வீட்டில் எந்த விதமான வாஸ்து குறைபாடுகளும் இல்லாமல் இருக்க விரும்பினால், வீட்டில் துடைப்பம் வைக்கும் போது அதன் விதிகளை கவனமாக கடைபிடிக்க வேண்டும். ஏனென்றால் வாஸ்து தோஷம் இல்லாமல் இருந்தால் வீட்டில் நிம்மதியும், நிதியும் பெருகி காணப்படும். வாஸ்துவில் தவறு செய்யும் நிலைமையை தலைகீழாக மாற்றிவிடும். 

வாஸ்துசாஸ்திரத்தின்படி, வீட்டில் வைக்கப்படும் துடைப்பம் மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. ஆகவே வீட்டை சுத்தம் செய்துவிட்டு துடைப்பத்தை வைக்கும் போது சில விஷயங்களை தவறாமல் கடைபிடித்தால், வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் எப்போதும் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். மகாலட்சுமி செல்வத்தின் கடவுள். ஆகவே துடைப்பத்தை சரியான திசையில் வைத்திருப்பதன் மூலம், மகிழ்ச்சி, செழிப்பு ஆகியவை உங்களுக்கு கிடைக்கும். 

துடைப்பம் வைக்கும் திசை 

வாஸ்துவின்படி துடைப்பத்தை ஒருபோதும் சில திசையில் வைக்கக்கூடாது. வீட்டின் வடகிழக்கு திசையில், அதாவது ஈசான மூலையில் வைக்கவேகூடாது. ஏனெனில் இது தான் தெய்வங்கள் வீற்றிருக்கும் திசையாகக் கருதப்படுகிறது. எனவே இந்த திசையில் துடைப்பம் வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. துடைப்பத்தை தவறான திசையில் வைத்திருப்பதால் நிதி இழப்பு ஏற்படும். துடைப்பத்தை வீட்டின் தெற்கு அல்லது தென்மேற்கு திசையில் வைக்கலாம். இதனால் நல்ல பலன்கள் கிடைக்கும். 

எதை செய்யக் கூடாது

யாராவது வீட்டை விட்டு வெளியே போகும்பட்சத்தில், அந்த சமயம் வீட்டை சுத்தம் செய்யக் கூடாது.  மீறி வீட்டை சுத்தம் செய்தால் அந்த வேலையில் வெற்றி கிடைக்காது.

உங்கள் வீட்டிற்கு புதிய மருமகள் வந்தாலோ அல்லது உங்களுடைய மகள்கள் வீட்டிலிருந்து மாமியார் வீட்டிற்குச் சென்றாலோ, உடனே வீட்டை சுத்தம் செய்யக் கூடாது. இப்படி செய்தால் உங்கள் வீட்டின் மீது மகாலட்சுமி கோபம் கொள்வார். பண இழப்பு ஏற்படும் என்பது ஐதீகம்.

நீங்கள் இரண்டு துடைப்பத்தை ஒன்றாக வைக்கக்கூடாது. உங்கள் வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட துடைப்பங்கள் இருந்தால், அவற்றை வீட்டின் வேறு வேறு பகுதிகளில் வைத்து கொள்ளுங்கள். அதற்கு பதிலாக ஒரு துடைப்பத்தின் மேல் இன்னொரு துடைப்பத்தை வைத்தால் வீட்டில் வீண்சண்டைகள் ஏற்படும். 

எப்போதும் துடைப்பத்தை மறைத்து வைக்க வேண்டும். வெளியில் இருந்து வீட்டிற்கு வருபவர்கள் துடைப்பத்தை பார்க்க முடியாத மாதிரி அதனை வைக்க வேண்டும். துடைப்பத்தை திறந்த வெளியில் வைத்தால் வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருக்கலாம். 

உடைந்த அல்லது சேதமான துடைப்பத்தை உடனடியாக வீட்டை தூக்கி போட வேண்டும். துடைப்பத்தை படுக்கைக்கு அடியிலும், சமையலறையிலும் வைக்கக் கூடாது. இதனால் வீட்டு குடும்ப உறுப்பினர்களிடையே சண்டை அதிகமாகும். 

இதையும் படிங்க: உங்க வீட்டுல பணமழை பொழியணுமா? இந்த ஒரு அதிசய மரத்தை மட்டும் நட்டு வெச்சு பாருங்க!

துடைப்பம் எப்போதுமே படுத்து நிலையில் தான் இருக்க வேண்டும். அதை ஒருபோதும் நிமிர்த்தி நேராக நிற்க வைக்கக் கூடாது. இதனால் உங்கள் வாழ்க்கையில் வீண் பிரச்சனைகள் உண்டாக்கும். வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்தும். 

துடைப்பத்தை ஒருபோதும் மிதிக்கக்கூடாது. அப்படி மிதிப்பது மகாலட்சுமியை அவமதிப்பது போலாகும். இதனால் வீட்டில் வாஸ்து தோஷம் உண்டாகும். பண இழப்பையும் சந்திக்க நேரிடும். 

வீட்டில் துடைப்பத்தை வைத்து பயன்படுத்தும்போது சரியான வாஸ்து விதிகளை பின்பற்ற வேண்டும். அப்போது தான் எல்லா வளங்களும் கிடைக்கப் பெறுவீர்கள். நிதி நிலை மேம்படும், வீட்டில் செழிப்பு வரும். 

இதையும் படிங்க: நகங்களை அடிக்கடி கடிக்கும் பழக்கம் இருக்கா? அதனால் வரும் பாதிப்புகள் இவ்வளவு இருக்கு!

click me!