திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இந்தியாவிலே முதல் முதலாக சென்னையில் தான் பத்மாவதி தாயார் கோயில் கட்டப்பட்டுள்ளது. சென்னை தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையில் கட்டிமுடிக்கப்பட்ட இந்த கோயிலில், இன்று காலை பத்மாவதி தாயார் திருவுருவ சிலை பூஜைகளுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த கோயில் சென்னை மக்களின் நீண்ட கால எதிர்ப்பார்ப்பாகும்.