துலாம் ராசி அன்பர்களே...
இவர்களுக்கு சனி பகவான் நல்ல பலன் கொடுப்பார். இவர்களுடைய ஜாதகத்தில் சனி பகவான் கேந்திர திரிகோண ராஜயோகத்தை உருவாக்குவதால் நல்ல நேரம் தொடங்கிவிடும். தொழில் செய்பவர்கள், சிந்தனையாளர்கள், மருத்துவர்கள், ஆன்மீகவாதிகள், கண்டுப்பிடிப்பாளர்கள், ஆராய்ச்சி செய்பவர்கள் எல்லோருக்கும் நேரம் நன்றாக இருக்கும். பங்குச் சந்தை, பந்தயம், லாட்டரி ஆகியவற்றில் பணம் முதலீடு செய்பவர்களுக்கு சாதகமான நேரம். காதல் கைகூடும். குழந்தை பாக்கியம் பெற விரும்புபவர்களுக்கு சாதகமான நேரமாக இருக்கும்.