ஸ்ரீராம நவமி 2023: எப்போது? எப்படி வழிபாடு செய்தால், ஐஸ்வர்யம் உண்டாகும்...

First Published Mar 25, 2023, 2:11 PM IST

Ram Navami 2023 : இந்துக்களுக்கு மங்களகரமாக விளங்கும் ஸ்ரீராம நவமி சிறப்புகள் குறித்த தொகுப்பு.. 
 

திருமாலுடைய அவதாரங்களில் அதிகம் புகழப்படுவது ஸ்ரீ ராம அவதாரம். ஏனென்றால் இதுவே, கடவுள் திருமால், ஆறறிவு கொண்ட மனிதராக வந்து, ஒழுக்க நெறிகளை முறையாக வாழ்ந்து காட்டின அவதாரம். பாசம், பக்தி, வீரம், அறம், தோழமை, சகோதரத்துவம், பெற்றோரை மதித்தல் என எல்லாவற்றிற்கும் ராமனே எடுத்துக்காட்டாக விளங்குகிறார். அப்பேர்ப்பட்ட ராம பிரானாக திருமால்  அவதரித்த தினம் தான் ஸ்ரீ ராமநவமி எனப்படுகிறது. 

ஸ்ரீராம நவமி 2023 எப்போது? 

ஸ்ரீராமநவமி இந்த ஆண்டு மார்ச் 30ஆம் தேதி வியாழக்கிழமை அன்று வருகிறது. ஸ்ரீராம நவமி அன்று பூஜை செய்ய வேண்டிய முஹூர்த்த நேரம் என்பது காலை 11:11 மணி முதல் மதியம் 01:40 மணி வரை உள்ளது. 

ராமநவமி சிறந்த பூஜை நேரம் 

நவமி திதி மார்ச் 29ஆம் தேதி அன்று இரவு 09:07 மணிக்கு தொடங்கி மார்ச் 30, 2023 அன்று இரவு 11:30 மணிக்கு முடிவடைகிறது. ஸ்ரீராம நவமி பூஜைகளை செய்வதற்கு இடைக்காலம் மிகவும் உகந்த நேரம் என ஆச்சார்ய பெருமக்கள் கூறுகின்றனர். 

ஸ்ரீராம நவமி ஏன் கொண்டாடப்படுகிறது?

ராமர் அவதரித்த நாளைக் கொண்டாடும் விதமாக ஸ்ரீராம நவமி விழா கொண்டாடப்படுகிறது. இந்து பஞ்சாங்கத்தின் படி, ராமர், சைத்ரா மாதத்தின் சுக்ல பக்ஷத்தில் நவமி திதியில் அவதரித்தார். அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் ராம நவமி நாளாக கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ ராம நவமி பூஜை சடங்குகளை செய்ய மத்தியகாலம் மிகவும் உகந்த காலமாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் ஸ்ரீராமரை மனதார வேண்டிக்கொண்டால் எல்லாம் ஐஸ்வர்யம் உண்டாகும் என்கின்றனர் ஜோதிடர்கள்.  

இதையும் படிங்க: கோயில்களில் கொடுக்கும் கயிற்றை எத்தனை நாள் கட்டியிருக்க வேண்டும்? அதனால் என்னென்ன பலன்கள்..!

ஸ்ரீராமன் யார்?

இந்து கடவுளான ஸ்ரீராமர் மகாவிஷ்ணுவின் ஏழாவது அவதாரம். இவரது தந்தை தசரதர் கோசல நாட்டை ஆண்டவர். லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன் ஆகியோர் ராமரின் உடன்பிறந்தவர்கள். ராமர் சீதையை மணந்தார். அரச குடும்பத்தில் பிறந்தாலும் கூட மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர் ஸ்ரீராமர். கம்ப ராமாயணம் என்ற இதிகாசம், ராமரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது. இதிகாசத்தில் குறிப்பிடப்படும் முக்கியமான கதைகளில் ஒன்று, சீதையை அசுரர் குல மன்னன் ராவணன் கடத்தியது. சீதை நெருப்புக்குள் இறங்கி தன் கற்பை நிறுவியது. 

இதையும் படிங்க: இறைவனுக்கு விரதம் இருக்கும்போது பூண்டு, வெங்காயம் சாப்பிடக் கூடாது.. இது அறிவியல் உண்மை தெரியுமா?

click me!