நரசிம்மர் வழிபாடு
நரசிம்ம ஜெயந்தி அன்று அதிகாலையில் எழுந்து வீட்டில் விளக்கு ஏற்றிவிடவேண்டும். நரசிம்மருக்கு பாலும், பானகமும் நைவைத்தியமாக படையலிட்டு வழிபட வேண்டும். உங்கள் வீட்டுக்கு அருகில் நரசிம்மர் கோயில் இருக்கும்பட்சத்தில் நேரில் சென்று வழிபடுங்கள். இன்று மாலை 6.30 மணிக்கு மேலாக .. 07.30 மணிக்குள்ளாக நரசிம்மர் வழிபாட்டை செய்து முடிப்பது நல்ல பலனை தரும். இன்றைய தினம் நரசிம்மரை வழிபட்டால் கடன் தொந்தரவு, பணக்கஷ்டம், வறுமை ஆகியவை நீங்கும். எதிரிகளின் தொல்லைகளை சமாளிக்கலாம். இழுபறியாக கிடந்த வழக்கு முடியும். எந்த பிரச்சனையாக இருந்தாலும் நரசிம்மருக்கு விரதமிருந்து வழிபட்டால் எளிய தீர்வு கிடைக்கும்.
இதையும் படிங்க: சந்திர கிரகணம் 2023 எப்போது? தேதி, நேரம் குறித்த முழுவிவரம்...