மாசி மகம் மகத்துவம்..
இறைவழிபாட்டிற்கு ஏற்ற மாதமான மாசியில் வரும், இந்த நாளில் சிவபெருமான், மகாவிஷ்ணு, முருகப்பெருமான் ஆகிய முப்பெரும் கடவுளுக்கும் வழிபாடு செய்யலாம். இந்த நன்னாளில் அவர்களை வணங்கும்போது தோஷங்கள் நீங்கும் என நம்பப்படுகிறது. இன்றைய தினம் புண்ணிய ஸ்தலங்களை தரிசனம் செய்வதும், புண்ணிய நதிகளில் நீராடுவதும் பாவங்களை போக்கி இறைவனின் அருளை பெற்று தரும் என்பது ஐதீகம்.