வெங்காயம் வெட்டும்போது கண்ணில் தண்ணீர் வருவது இயல்பு. இதனாலேயே பலர் வெங்காயம் வெட்டத் தயங்குவார்கள். நீங்களும் இந்த பிரச்சனையால் அவதிப்பட்டால், இங்கே சொல்லப்பட்டிருக்கும் சில சூப்பர் டிப்ஸை முயற்சி செய்யுங்கள்.
சாப்பாட்டுக்கு வெங்காயம் நல்ல சுவையைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதை வெட்டும்போதுதான் கண்ணில் தாரை தாரையாகத் தண்ணீர் வரும். இதனாலேயே சிலர் வெங்காயம் வெட்டுவதைத் தவிர்த்துவிடுவார்கள். வெங்காயம் வெட்டும்போது கண் எரிச்சல், கண்ணீர், மூக்கு ஒழுகுதல் போன்ற பிரச்சனைகள் ஏன் ஏற்படுகிறது? இதை எப்படித் தடுப்பது என்று பார்க்கலாம்.
26
காற்றில் பரவும் கலவைகள்
வெங்காயத்தில் உள்ள சல்பர் கலந்த கலவைகள்தான் கண்ணீர் வர முக்கிய காரணம். நாம் வெங்காயத்தை வெட்டும்போது, அவை காற்றில் பரவி, நம் கண்களில் பட்டு எரிச்சலை உண்டாக்கி கண்ணீரை வரவைக்கிறது. ஆனால், இனி கவலைப்படத் தேவையில்லை. இந்த சிக்கலைத் தவிர்க்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய சில டெக்னிக்குகளை இங்கே பார்க்கலாம்.
36
வெங்காயத்தை ஃப்ரீசரில் வைக்கவும்
இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் வெங்காயம் வெட்டுவதற்கு குறைந்தது 10 முதல் 30 நிமிடங்களுக்கு முன்பு குளிர்சாதனப் பெட்டியிலும், அல்லது 5-10 நிமிடங்கள் ஃப்ரீசரிலும் வைத்துவிடுங்கள். வெங்காயம் குளிர்ச்சியடைவதால், கண்ணீரை உருவாக்கும் என்சைம்களின் வேகம் குறைகிறது. இது கண்ணீர் வருவதைத் தடுக்கும்.
குளிர்சாதனப் பெட்டியில் வைக்க உங்களுக்கு நேரமில்லை என்றால், ஓடும் நீரின் கீழ் வைத்தோ அல்லது தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் வைத்தோ வெங்காயத்தை வெட்டுங்கள். வெங்காயத்தின் தோலை உரித்து, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதற்குள் வைத்து வெட்டலாம். இதுவும் கண்ணீர் வருவதைத் தடுக்கும்.
56
கூர்மையான கத்தியைப் பயன்படுத்துங்கள்
இது கேட்பதற்கு விசித்திரமாக இருக்கலாம், ஆனால் இது உண்மை. வெங்காயத்தை வெட்ட எப்போதும் கூர்மையான கத்தியைப் பயன்படுத்துங்கள். கூர்மையான கத்தி வெங்காயத்தை நேர்த்தியாக வெட்ட உதவுவதோடு, வெட்டும் நேரத்தையும் குறைக்கும். இது கண்ணீர் வருவதைத் தடுக்கும்.
66
வேரின் நுனியை வெட்டுங்கள்
வெங்காயத்தின் வேர்ப்பகுதியை, அதாவது அடிப்பகுதியை, கடைசியாக வெட்டுங்கள். ஏனென்றால், அந்தப் பகுதியில்தான் கண்ணீரை உண்டாக்கும் கலவைகள் அதிகமாக உள்ளன. முதலில் மேல் முனையை வெட்டிவிட்டு, வேர்ப்பகுதியை கடைசியாக வெட்டினால், எரிச்சலைத் தரும் வாயுக்கள் காற்றில் பரவுவது குறையும்.