1.5 லட்சம்பேர் சாகும்போது நீங்கள் டெல்லிக்கு ஓடியது போல் நாங்கள் ஓழியவில்லை..! திமுகவுக்கு சிடிஆர் நிர்மல் சவுக்கடி..!

Published : Nov 05, 2025, 12:54 PM IST

இந்த சதிகார கும்பலை இத்தோடு அரசியலை விட்டு விரட்டப்பட வேண்டும் என்கிறார்கள். இதுமட்டுமல்ல. தமிழகத்தில் இயற்கை வளம் எல்லாத்தையும் முடிச்சுட்டாங்க. 

PREV
13

தமிழக வெற்றி கழகத்தின் சிறப்பு பொதுக்கூட்டம் மாமல்லபுரத்தில் தொடங்கியது. அங்கு பேசிய துணைப் பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார், ‘‘நம்முடைய கட்சி ஆரம்பித்து இரண்டு வருடம் ,7 மாதங்கள் ஆகிவிட்டது. இந்த இரண்டு வருட ஏழு மாதத்தில் தமிழக மக்கள் அதாவது கோடிக்கணக்கான தமிழக மக்களுக்கு நம்முடைய தலைவர் அவர்கள் நம்பிக்கை விதைத்திருக்கிறார். ஒரு மாற்றம் வரவேண்டும், இப்படி ஒரு குறையோடு கிடக்கிற இந்த சிஸ்டத்தில் இருந்து ஒரு மாற்றம் வரவேண்டும் என்று நம்பிக்கை விதைத்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் நம்மளுடைய தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகிகள் நம்முடைய தலைவர், தலைவரின் உரை, தலைவரின் செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் தமிழக மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உற்றுநோக்கி பார்த்து வருகிறார்கள்.

23

ஒரு சின்ன உதாரணம், கடந்த வாரம் 28 பேர் கொண்ட ஒரு நிர்வாக குழுவை தலைவர் அறிவித்தார், அந்த நிர்வாக குழு கூட்டத்தை அடுத்த நாள் மதுரைக்கு தேவர் ஜெயந்திக்காக போயிட்டு இருந்தோம். அப்ப நடுவுல தேனீருக்காக ஒரு இடத்தில் நிறுத்தினோம். ஒரு பெரியவர் என்கிட்ட வந்து கேட்டார் இப்பதான் நீங்க வந்து 28 பேர் கொண்ட கூட்டத்தை முடித்து இருக்கீங்க. என்ன முடிவு எடுத்தீங்கன்னு கேட்டார். மிகப்பெரிய ஒரு ஆச்சரியமாக இருந்தது. ஏன்னா இப்ப நிறைய பேரு பேசுறவங்க சொன்னாங்க அரசியல் வழிபடுத்தனும்னு. கிட்டத்தட்ட 80 இல்ல 90% 100 சதவீத தமிழக மக்களை நம்முடைய தலைவர் அரசியல் வழிபடுத்தி இருக்கிறார். ஒரு கூட்டம் நடந்து இரண்டு மணி நேரத்தில் அந்த கூட்டத்துல என்ன நடந்துச்சு என ஒருவர் என்னிடம் கேட்கிறார் என்றால் இந்த 15, 16 வருஷத்துல இதுதான் நான் பார்ப்பது முதல் முறை.

ஸ்டாலின் தினமும் கூட்டம் நடத்திட்டு இருக்கிறார். கோடிக்கணக்கான மக்கள் டிவில பாத்துருப்பாங்க. யாராவது ஒருத்தருக்கு என்ன கூட்டம் நடத்துனாங்கன்னு தெரியுமா? யாருக்கும் எதுக்கு கூட்டினாரு? என்ன கூட்டம் நடத்துறாங்கன்னு தெரியாது. ஏனென்றால் மொத்த மக்களும் இவர்கள் மீது எந்த நம்பிக்கையும் இல்லாமல் இருக்கிறார்கள். இவர்கள் கூடினாலே ஒன்னு அவங்க குடும்பத்தை வளர்க்கிறதாக இருக்கும். இல்ல, இந்த நாட்டை கொள்ளை அடிக்கிறதா இருக்கும். அரசியலை விட்டு ஒதுங்கி இருந்த மக்கள் இன்று தமிழக வெற்றிக்கழகத்தின் ஒவ்வொரு நகர்வை பார்ப்பதற்கு காரணம் அவர்களுக்கு தலைவர் மீது முழு நம்பிக்கை. 2026வது நாம் காப்பாற்றப்படுவோம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு வந்திருக்கிறது. இந்த தலைவருடைய சுற்றுப்பயணம் எல்லாம் ஒவ்வொரு நாளும் சிறப்பாக சென்று கொண்டிருந்தபோது தான் இந்த கரூர் பெருந்துயரம் நம்மையெல்லாம் கலங்க வைத்தது. திமுக மாதிரி ஒன்றரை லட்சம் பேர் 2009 இல் இலங்கையில் மறைந்தார்கள். அதிலிருந்து பல பேர் புதிதாக அரசியல் வந்தவர்கள், நான் உட்பட.

33

அப்போது நடந்த கொடுமை எல்லாம் பார்த்தீங்கன்னா ஒன்றரை லட்சம் பேர் இறந்து கொண்டிருந்தார்கள். அப்போது போய் திமுகவுடைய தலைவர்கள் எல்லாம் டெல்லியில் உட்கார்ந்து அமைச்சரவை பேரம் பேசிட்டு இருந்தாங்க. நாம அந்த மாதிரியான அரசியல்வாதிகள் அல்ல. ஒவ்வொருவரும் ஒரு குடும்பம். இப்போது மட்டும் இல்லை. இன்னும் பல ஆண்டுகள் அவர்களோடு கண்டிப்பாக துணை நிற்போம். நாம் ஒன்றும் திமுக போல் அல்ல. கரூர் சம்பவம் மீளமுடியாத ஒரு துயரம். வாழ்நாள் முழுவதும் இதிலிருந்து நம் தலைவர் மீள மாட்டார் என்பதில் கண்டிப்பாக உறுதியாக நிச்சயமாக இருக்கிறோம். ஏனென்றால் மக்களுக்காக வந்த ஒரு தலைவருக்கும், மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம். இந்த திமுகவும் சரி, அவர்களை சுற்றி இருப்பவர்களும் சரி. என்னைக்கும் மக்களுக்கு இல்ல. இந்த தமிழகத்தில் எதையுமே இவர்கள் கண்டு கொள்ள மாட்டார். இந்த ஒன்றரை மாதத்துல நம்மை எல்லாரும் பார்த்த பொதுமக்கள் எல்லாம் சொல்லி வருகிறார்கள். இந்த சதிகார கும்பலை இத்தோடு அரசியலை விட்டு விரட்டப்பட வேண்டும் என்கிறார்கள். இதுமட்டுமல்ல. தமிழகத்தில் இயற்கை வளம் எல்லாத்தையும் முடிச்சுட்டாங்க.

Read more Photos on
click me!

Recommended Stories