கரூரில் நிறைய இழப்புகளை, மரணத்தை சந்தித்த குடும்பங்கள்கூட விஜய் மீது உள்ள நம்பிக்கையை இழக்கவில்லை. பிள்ளைகளை இழந்தவர்கள்கூட விஜய் மீது அந்த நம்பிக்கையை இழக்கவில்லை. அந்த நம்பிக்கைக்கு அவர் கண்டிப்பாக எதையாவது செய்தாக வேண்டும். இப்படி வீட்டிற்குள்ளேயே முடங்கி இருப்பது எதனால் என்பதற்கு நான்கு விதமாக, 4000 விதமாக பேச ஆரம்பித்து விட்டார்கள். அந்த பேச்சை எல்லாம் முடித்துவிட்டு அவர் வெளியே வந்தால் தான் சரியாக இருக்கும்.
ஆந்திராவின் பவன் கல்யாண் உதாரணத்தை எடுத்துக்கொண்டு அவர் மாற்றத்திற்காக ஒரு படை வீரராக, படைத் தளபதியாக மாற்றத்திற்கான முன்னெடுப்புகளை செய்ய வேண்டுமே தவிர, அவரை தலைவராக வேண்டும் என இந்த சமயத்தில் நினைக்கக்கூடாது. அதைவிட மாற்றத்திற்கு உறுதுணையாக இருப்பதுதான் சிறப்பாக இருக்கும்’’ எனத் தெரிவித்துள்ளார்.