அதாவது அங்கீகரிக்கப்படாத கட்சிகள் தங்களுக்கான பொதுச் சின்னத்திற்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகள் வெளியானது. வாக்கு சதவீதம், சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு அப்படியே இருக்கும்.தேர்தலில் வெற்றி பெறக்கூடிய கட்சிகள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறும். இப்படி அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அந்தந்த கட்சிகள் விரும்புகிற சின்னமே நிரந்தரமாக வழங்கப்படுகிறது. அந்த வரிசையில் தான் திமுகவுக்கு உதயசூரியனும், அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னமும் இருக்கிறது.
விசிக, நாதக கட்சிகளும் அங்கீகாரத்தை பெற்று முறையே பானை, விவசாயி சின்னங்களை தக்க வைத்திருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி தேர்தலில் போட்டியிட்டு குறிப்பிட்ட அளவு வாக்கு சதவீதம் அல்லது வெற்றியை பதிவு செய்கிற கட்சி தான் அங்கீகரிக்கப்படும்.