தவெகவுடன் கூட்டணிக்கு ஏங்கும் பாஜக- காங்கிரஸ்..! இந்திய அளவில் ஸ்கெட்ச்..! விஜயின் மாஸ்டர் ப்ளான்..!

Published : Oct 25, 2025, 12:23 PM IST

தமிழகம் அண்டை மாநிலங்களுடன் வேறுபாடுகளால் பிரிந்து கிடக்கின்றன. அந்த பிளவு எப்படி சரிசெய்யப்படும் என்கிற கவலை பலருக்கும் உண்டு. அதற்கு சரியான தீர்வு விஜய். தென் மாநிலங்களில் இருந்து வரும் பிளவை ஒற்றுமையாக்க விஜய் ரசிகர்களால் மட்டுமே முடியும்

PREV
14

மழை வெள்ள பாதிப்பால் அரசியல் தலைவர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, அடுத்த கட்ட அரசியல் , தேர்தல் பணிகள் என முக்கிய முடிவுகளை விஜய் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. பாஜகவின் தீவிர அனுதாபி ஒருவர் கடந்த பல வாரங்களாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மூலம் சில வேலைகளை முடிக்க விஜயவாடாவில் கூடவே தங்கி இருந்ததாக சொல்லப்படுகிறது. அவர் மூலமாக பவன் கல்யாணை விஜய்யிடம் பேச வைக்கிற முயற்சிகளை பாஜக நடத்தி இருக்கிறது. விஜயுடன் பேச பவன் கல்யாணும் சம்மதிக்க, இருவரும் போனில் பேசி உள்ளனர் .

அப்போது விஜயிடம்,‘‘கூட்டணி பலத்தோடு இருக்கிற ஒரு கட்சியை தனியாக நின்று வீழ்த்துவது சாத்தியமில்லை’’ என்று எடுத்துக் கூறிய பவன், தான் ஜெகன்மோகன் ரெட்டியை ஆட்சியில் இருந்து வீழ்த்த சந்திரபாபு நாயுடு கூட்டணி சேர்ந்த பின்னணியையும், அதை வெற்றியடைந்த விதத்தையும் விளக்கி இருக்கிறார். பாஜக, அதிமுக கூட்டணிக்கு வந்தால் மட்டும் தான் பலமாக இருக்கக்கூடிய திமுகவை அசைத்துப் பார்க்க முடியும் என்று பவன் கல்யாண் சொல்ல, இந்த கோணத்தில் விஜயும் யோசிக்க ஆரம்பித்து இருப்பதாக சொல்கிறார்கள்.

24

ஆனால் உடனடியாக முடிவை சொல்லாத விஜய், டிசம்பர் வரை காத்திருங்கள் என சொன்னதாக கூறுகிறார்கள். இதையே பவன் கல்யாண், விஜயின் கூட்டணிக்கான சிக்னலாக எடுத்துக் கொள்ளலாம் என்று டெல்லி பாஜக தலைமையிடம் தெரிவித்திருக்கிறார். இன்னொரு பக்கம் அதிமுகவையும், பாஜகவையும் கடுமையாக விமர்சிக்க தவெக செய்தி தொடர்பாளர்களுக்கு ஜான் ஆரோக்கியசாமி அழுத்தம் கொடுத்து இருப்பதாக சொல்கிறார். விஜய், காங்கிரஸுடன் கை கோர்த்தால் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி என மூன்று மாநிலங்களில் தவெக பெரும் சக்தியாக உருவாகும் என்கிற திட்டத்தையும் விஜய்யிடம் சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது.

34

விஜய்க்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியாவின் பல மாநிலங்களிலும் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. குறிப்பாக கேரளாவில் விஜய் ரசிகர்கள் தமிழ்நாட்டை விட அதிகமாக இருப்பதாகவே கருதப்படுகிறது. ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா

போன்ற மாநிலங்களில் விஜய்க்கென்று ஐ.டி. விங் அணிகள் செயல்படுகின்றன. பெங்களூரு, மும்பை, பூனே, நவி மும்பை, அவுரங்காபாத், தானே போன்ற நகரங்களில் விஜய்க்கு வெறிகொண்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. சண்டிகார், அமிர்த்தசரஸ், ஜலந்தர், குருகிராம், ஃபரிதாபாத், இந்தூர், உஜ்ஜைன், சுரத், அல்மோரா, ஜெய்சல்மர் போன்ற இடங்களிலும் ரசிகர் மன்றங்கள் உள்ளன. தாய்லாந்து, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் ரசிகர்கள் உள்ளனர். இலங்கையில் லட்சக்கணக்கான ரசிகர்களின் ஆதரவு அவருக்கு இருக்கிறது. ஆக, இதையெல்லாம் கணக்கில் கொண்டு தன்னுடன் கூட்டணிக்கு வரும் தேசிய கட்சிகளாக இருந்தாலும் சரி, தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணியை ஏற்றுக் கொள்பவர்களுடன் இணையலாம் என்கிற எண்ணமும் விஜயிடம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

44

விஜயுடன் கூட்டணி அமைத்தால் தமிழகம் தாண்டி இந்தியா முழுவதும் ஆதாயம் பெறலாம் என்கிற நோக்கில் பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் தவெகவுடன் கூட்டணிக்கு காய் நகர்த்தி வருகின்றன. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருச்சி வேலுச்சாமி, ‘‘தமிழகம் அண்டை மாநிலங்களுடன் வேறுபாடுகளால் பிரிந்து கிடக்கின்றன. அந்த பிளவு எப்படி சரிசெய்யப்படும் என்கிற கவலை பலருக்கும் உண்டு. அதற்கு சரியான தீர்வாக விஜய் இருக்கிறார். தென் மாநிலங்களில் இருந்து வரும் பிளவை ஒற்றுமையாக்க விஜய் ரசிகர்களால் மட்டுமே முடியும். அவர் இந்தியாவெங்கும் உள்ள ரசிகர்களை அரசியல்படுத்துவதன் மூலம் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை கொண்டுவர முடியும்’’ என்கிறார்.

Read more Photos on
click me!

Recommended Stories