கடந்த நிதியாண்டில், 204 கோடி ரூபாய் வழங்கிய ரோஹிணி நிலேகனி, பெண் நன்கொடையாளரில் முதலிடம் பிடித்துள்ளார். 65 வயதாகும் இவர், அக்ஷரா பவுண்டேஷன் தலைவராக உள்ளார்.
துவக்க கல்வியில் இந்த அமைப்பு கவனம் செலுத்துகிறது. அர்க்யம் என்ற அறக்கட்டளை வாயிலாகவும் குடிநீர், கழிப்பறை பிரச்னைகளுக்கு ரோஹிணி தீர்வு கண்டு வருகிறார். ஆதார் அமைப்பின் தலைவராக இருந்த நந்தன் நிலேகனியின் மனைவியான இவர், எழுத்தாளர் ஆவார்.
இந்த ஆண்டு இந்துஜா குடும்பம், சுதிர் மற்றும் சமீர் மேத்தா, சைரஸ் மற்றும் அதர் பூனவல்லா ஆகியோர் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்து, முறையே ஏழாவது, ஒன்பதாவது மற்றும் பத்தாவது இடங்களைப் பிடித்தனர்.