மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைய சசிகலா தான் காரணம்..? அதிர்ச்சி பின்னணி..!

Published : Nov 05, 2025, 03:14 PM IST

பாஜகவும் ஓபிஎஸுக்கு அந்த அளவுக்கு மரியாதை கொடுக்கவில்லை. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வந்தபோது எப்படியாவது அவரை சந்திக்கறதுக்கு டைம் கொடுங்கள் என ஓபிஎஸ் கடிதம் எழுதியதையும் மனோஜ் விரும்பவில்லை.

PREV
13

யாருமே எதிர்பார்க்காத நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் டீமில் மிக முக்கியமான ஆதரவாளரான மனோஜ் பாண்டியன், திடீரென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இவ்வளவு நாட்களாக திமுகவை கடுமையாக எதிர்த்து வந்தவர் எப்படி திமுகவில் போய் இணைந்தார் என பலருக்கும் ஆச்சரியம். அதே நேரத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘‘நான் கொள்கைக்காக இருக்கக்கூடிய ஒரு நபர். அங்கே உண்மையான தொண்டர்களை அவர் இழந்து கொண்டு வருகிறார். ஓபிஎஸ் முக்கியத்துவம் அளிக்கவில்லை. இன்னொரு பக்கம் பாஜகவோடு கூட்டணி வைக்க மாட்டோம் என்கிறார். ஆனால், திடீரென சென்று பாஜகவோடு மறுபடியும் கூட்டணிக்கு பேசுகிறார். ஆனால், நான் கொள்கைக்காக இருப்பவன். திமுக திராவிட கொள்கைக்காக என்றைக்கும் போராடிக் கொண்டிருக்கிறது. அதனால் நான் திமுகவில் இணைந்து விட்டேன்’’ என விளக்கம் அளித்தார்.

23

மனோஜ் பாண்டியன் ஏன் திமுகவில் ஐக்கியமானார் என விசாரித்ததில் ஓ.பன்னீர்செல்வத்துடன் மிக நெருக்கமாக பயணித்து வந்தவர். அவருடைய ஒரு முக்கியமான முகமாகவும் மனோஜ் பாண்டியன் இருந்தார். தர்மயுத்தம் தொடங்கி எல்லா காலகட்டத்திலும் உடன் இருந்தவர் மனோஜ் பாண்டியன். தொடக்கத்தில் இருந்த வேகம் கூட இப்போது சமீப நாட்களாக ஓபிஎஸிடம் இல்லை. ஒட்டுமொத்தமான தமிழ்நாட்டுக்கான மாற்று முகமாக தன்னை முன்னிலைப்படுத்திய ஓபிஎஸ் இன்றைக்கு அவருடைய தொகுதியிலேயே தாங்குவாரா? என்கிற நிலைக்கு சுருங்கிவிட்டார். அவருடைய செயல்பாடுகள் அந்தளவுக்கு சரியில்லை என்பது மனோஜ் பாண்டியன் எண்ணமாக மாறிவிட்டது.

சமீபத்தில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை பசும்பொன்னில் நடந்தது. அப்போது ஓபிஎஸ், டிடிவி.தினகரன், செங்கோட்டையன் எல்லோரும் ஒன்றாக குருபூஜை பங்கேற்றங்க சென்றபோது காத்திருந்து ஓபிஎஸ், செங்கோட்டையன் இருவரும் சசிகலாவை சந்தித்தனர். இதையெல்லாம் மனோஜ் பாண்டியன் தரப்பு ரசிக்கவில்லை. இது மனோஜ் பாண்டியனை ரொம்பவே வருத்தப்பட வைத்திருக்கிறது. அதிமுக ஒற்றுமையாக இருந்தபோதே சசிகலாவுடன் மனோஜ் பாண்டியன் தரப்புக்கு ஓட்டுதல் இல்லாமால், முட்டல், மோதல்கள் எல்லாம் இருந்து வந்திருக்கிறது. இதுதான் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைய முக்கியக்காரணம் என்கிறார்கள்.

33

பாஜகவோடு கூடுதல் நெருக்கத்தை காட்டுகின்ற ஓ.பன்னீர்செல்வம் இப்போது கூட்டணியில் இல்லை எனக் கூறி வெளியேறினார். பாஜகவும் ஓபிஎஸுக்கு அந்த அளவுக்கு மரியாதை கொடுக்கவில்லை. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வந்தபோது எப்படியாவது அவரை சந்திக்கறதுக்கு டைம் கொடுங்கள் என ஓபிஎஸ் கடிதம் எழுதியதையும் மனோஜ் விரும்பவில்லை. இறங்கி அடிக்காமல் மென்மையான அனுகுமுறைதான் ஓபிஎஸிம் இருக்கிறது. ஓபிஎஸ் எப்போது வேண்டுமானாலும் எந்த ரூட்டும் எடுக்கலாம் என்கிற ஒரு நம்பகத்தன்மை மனோஜ் பாண்டியன் தரப்புக்கு இல்லாமல் போனது. ஓபிஎஸே கூடிய விரைவில் திமுக கூட்டணி பக்கம் வந்தாலும் வரலாம். ஏனென்றால் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரண்டு மூன்று முறை தனது மகனுடன் நேரில் சென்று சந்தித்துப் பேசி இருக்கிறார். அதன்பிறகு சமீபத்தில் திமுக வெற்றி பெறும் என்று கூறினார். மீண்டும் குருபூஜையின்போது இல்லை. அதிமுக பிரிந்து இருந்தால் திமுக ஜெயிச்சிரும் எனப் பேசினார். அவரே திமுக கூட்டணியில் ஐக்கியமானாலோ அல்லது அந்தக் கட்சியில் போய் சேர்ந்துவிட்டாலோ ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பதால் திமுகவில் மனோஜ் பாண்டியன் இணைந்து விட்டார்’’ என்கிறார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories