ஒருபோது நம்முடைய முதல்வர் அப்படிப்பட்ட செயல்களில் அற்பமாக சிந்திக்கின்றவர் அல்ல. அவர் சொன்ன வார்த்தைகளை உலகமே போற்றுகிறது. எந்த அரசியல் கட்சித் தலைவரும் அவருடைய தொண்டர்களை அழைத்து வந்து அவர்களை கொலை செய்ய வேண்டும் என்று எண்ண மாட்டார்கள் அந்த அடிப்படையில் தான் இதை பார்க்கிறேன் என்று பெருந்தன்மையான வார்த்தையை சொல்லியவர். கடமையாக நினைத்து இரவு தூங்காமல் அந்த பாதிக்கப்பட்ட பல நூறு பேர்களுக்கு மருத்துவமனையில் நல்ல சிகிச்சை கொடுத்து இறந்தவர்களுடைய உடலுக்கு மரியாதை செலுத்தி குடும்பத்திற்கு நிதி உதவியும்கொடுத்தவர்.
41 பேர் இறந்த சம்பவத்தில் தமிழக முதல்வர் நடந்துகொண்ட முறையை உலகமே பாராட்டுகின்றது. சாமானிய மக்கள் வரைக்கும் எவ்வளவு பெருந்தன்மையாக நடந்து கொண்டார் எனச் சொல்கிறது. முதல்வரை சிறுமைப்படுத்த நினைத்தால் விஜய் சிறுமைப்பட்டு போவார். ஓடி ஒழிந்தவர் விஜய். அவர் முதல்வர் பற்றி பேசக்கூடாது. நேற்றைய பொதுக்கூட்டத்தில் அங்கே இருக்கிறவர்கள் நானும் ரவுடிதான்னு சொல்லி வடிவேல் சொன்ன மாதிரி பேசி இருக்கிறார்கள். அதெல்லாம் பெரிய விஷயம்’’ எனத் தெரிவித்துள்ளார்.