வெள்ளிக்கிழமை, கேரள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, மூத்த காங்கிரஸ் தலைவரான சசிதரூர், மாநிலத் தலைமையும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உயர் மட்ட குழுவின் ஒரு முக்கியமான கட்சிக் கூட்டத்தைத் தவிர்த்தார். இதனையடுத்து சசிதரூர் இனி கட்சிக்கு அவசியமானவர் இல்லை என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சந்தீப் தீட்சித் உட்பட காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர். இதனால், காங்கிரஸ் கட்சியில் விரிசல் ஏற்படக்கூடும் என கூறப்படுகிறது. இதற்கு மத்தியில் காங்கிரஸ் கூட்டத்தில் தான் கலந்து கொள்ளாததற்கு விளக்கமளித்த திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூர், ‘‘பகிரங்கமாக விவாதிப்பதை விட, கட்சித் தலைமையிடம் நேரடியாக கவலைகளை எழுப்புவது நல்லது’’ என்று கூறினார்.