விஜயின் பவுன்சர்கள் அடாவடித்தனமாக நடந்துகொள்வது இது முதன்முறையல்ல. கல்வி விருது வழங்கும் விழா, மாமல்லபுரத்தில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனை விழா என பல இடங்களில் ரசிகர்களையும், தொண்டர்களையும், பத்திரிக்கையாளர்களையும் தாக்கிய சம்பவங்கள் நடந்துள்ளன. இது விஜய் மீதான பிம்பத்திற்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.
விஜய்யின் பாதுகாப்புற்கு வெளிநாட்டை சேர்ந்த நிறுவனத்தின் பவுன்சர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். துபாயை தலைமையிடமாக கொண்ட ஜென்டர் செக்யூரிட்டீஸ் நிறுவனம் சார்பில் தவெகவின் விழாக்களுக்கு பவுன்சர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இந்த நிறுவனம் உலக பிரபலங்களான டாம் குரூஸ், சல்மான் கான், அமிதாப் பச்சன், சச்சின், கபில்தேவ் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றன. நடிகர் விஜய்க்கு இந்த நிறுவனம் முதல் முறை பாதுகாப்பு வழங்கவில்லை. ஏற்கனவே நடிகர் விஜய் நடத்திய கல்வி விருது, விக்கிரவாண்டி மாநாடு, கட்சி அறிமுக விழா போன்ற நிகழ்ச்சிகளில், அவருக்கு பாதுகாப்பு வழங்கி உள்ளனா்.