சசிகலா, டிடிவி.தினகரன், ஓபிஎஸ்ஐ நம்பி போகலாம் என்றால் அது வேலைக்காகாது என்கிற முடிவுக்கு வந்துவிட்டாராம் செங்கோட்டையன். கவுண்டர் பாலிடிக்ஸ் நகர்த்த விரும்புகிறார் சசிகலா. திமுகவிலிருந்தும் சிக்னல் கிடைக்கவில்லை. பதவி இல்லை என்றால் பார்க்க வந்த கூட்டம்கூட இனி வருமா எனத் தெரியாது எனப் புலம்பியதாக கூறுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள். தனக்கு ஆதரவாக இருந்த எம்.எல்.ஏ பண்ணாரிகூட திடீரென எடப்பாடி பக்கம் சாய்ந்து விட்டார். இதையெல்லாம் கூட்டிக் கழித்து அரசியல் கணக்குப் போட்டு வருகிறார் செங்கோட்டையன். திடீரென அண்ணாமலையார் துணையே என்ற மனநிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்போது இந்த ஒத்த கருத்துடையவர்களை இயக்குவது யார்? அண்ணாமலை தான் என்கிறார்கள். ‘‘என் பதவியை பறித்த உன்ன தூங்க விடமாட்டேன்’’ என சபதம் எடுத்திருக்கிறார் அண்ணாமலை. இபிஎஸ்ஸுக்கு எதிராக காய் நகர்த்துவதும் அவர்தான். அதனாலதான் ஓபிஎஸ், டிடிவி.தினகரன் என எல்லாரும் பாஜகவையும், நைனாரையும் பேசினாலும் அண்ணாமலை ரொம்ப நல்லவர் என சர்டிபிகேட் கொடுத்து வருகிறார்கள். அண்ணாமலை காய் நகர்த்துவது எதற்காக இதற்கு செவி சாய்குமா டெல்லி தலைமை. அண்ணாமலையை பொருத்தவரை இபிஎஸை தோற்கடிக்க வேண்டும். உன் விரலை வைத்து உன் கண்ணையே குத்துகிறேன் என்றுதான் சசிகலா, ஓபிஎஸ். டிடிவி, செங்கோட்டையன தூண்டிவிடுகிறார்.