2025 பீகார் தேர்தலின் ஆரம்ப முடிவுகளில், அசாதுதீன் ஓவைசியின் கட்சியான ஆல் இந்தியா மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி சீமாஞ்சல் பகுதியில் இரண்டு இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கடந்த தேர்தலுக்குப் பிறகு இந்த முன்னிலை முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் மொத்தம் 143 இடங்களில் போட்டியிட்டது, தற்போது 43 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இரண்டும் தலா 165 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
பீகார் சட்டமன்றத் தேர்தலில் அசதுதின் ஓவைசியின் ஆல் இந்தியா மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன், காங்கிரஸ்-ஆர்.ஜே.டி தலைமையிலான மகா கூட்டணி முயற்சிகளை முற்றிலும் முடிவுக்கு கொண்டுவந்தது. இது சிறுபான்மையரான முஸ்லிம் ஓட்டுகளை சிதறச் செய்து, எதிர்க்கட்சிகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. தேர்தல் நவம்பர் 6, 11-ஆம் தேதிகளில் நடைபெற்று, இன்று வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. ஆரம்ப கட்ட வாக்கு எண்ணிக்கையில் பாஜக ஐக்கிய ஜனதா தள கூட்டணியான என்டிஏ கூட்டணி முன்னிலையில் உள்ளது.