இந்நிலையில், தவெக மாநாடு நடந்து முடிந்தது முதல் விஜய்யை விமர்சிப்பதையே வழக்கமாக வைத்துள்ள சீமான், முதன் முறையாக அவரை பாராட்டியுள்ளது அனைவரின் கவனத்தையும் திசைதிருப்ப வைத்துள்ளது. வடமாவட்டங்களில் கோரத்தாண்டவமாடிய பெஞ்சல் புயல் விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களை கடுமையாக புரட்டிப்போட்டுள்ளது.
புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆளும் கட்சியான திமுக உள்பட அனைத்து கட்சிகளும் உதவி செய்து வரும் நிலையில், விஜய்யும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சென்னையில் உள்ள தவெக அலுவலகத்துக்கு வரவழைத்து நிவாரண உதவிகளை வழங்கினார்.
இந்த உதவியே அவருக்கு வினையாகிப் போனது. பாதிக்கப்பட்ட மக்கள் துயரத்தில் இருக்கையில், அவர்களின் இடத்துக்கு சென்று நிவாரண உதவி வழங்காமல், ஆறுதல் தெரிவிக்காமல் அவர்களை தனது இடத்தில் வரவழைத்து உதவி செய்தது மற்ற அரசியல் கட்சியினர் மட்டுமின்றி நடுநிலையாளர்களிடமும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.