மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் தமிழகத்தில் ஆட்சியமைத்தது. திமுக ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆக உள்ளது. இந்த இரண்டு ஆண்டுகளில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஸ்டாலின் தலைமையிலான அரசு செய்திருந்தாலும், தேர்தல் பிரச்சாரத்தின் போது சொன்ன பல்வேறு வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன.
இந்த திட்டம் நடைமுறைக்கு சாத்தியமில்லை என தெரிந்தும் இதனை செயல்படுத்துவோம் என பொய்யான வாக்குறுதியை கொடுத்து திமுகவினர் மக்களை ஏமாற்றி வருவதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன. சில நாட்களாக இந்த உரிமைத் தொகை பற்றிய பேச்சுக்கள் எல்லாம் அடங்கி இருந்த நிலையில், தற்போது மீண்டும் கிளம்பி உள்ளன.
இதற்கு காரணம் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசாக வழங்கி இருந்தது. இதனை வழங்கியதோடு மட்டுமில்லாமல் ஊர் ஊராக போஸ்டர் ஒட்டி அதனை விளம்பரப்படுத்தியும் வருகின்றனர். அதில் திமுக ஆட்சிக்கு வந்தபின் படைத்த சாதனைகள் என லிஸ்ட் போட்டு சிலவற்றை குறிப்பிட்டுள்ளனர்.