மேலும் ஏழை மக்கள் சிகிச்சை பெறுவதற்கு வசதியாக தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக்- திட்டம் ஜெயலலிதா பெயரில் இருந்ததால் அதனை திமுக அரசு மூடிவிட்டது. அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வினால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அதிமுக அரசு கொண்டு வந்தது. திமுக ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே இல்லை. தமிழகம் முழுவதும் ஊழல் என்ற குரல்தான் ஒலிக்கிறது. இரட்டை வேடம் போடும் ஒரே கட்சி திமுக ஒன்று தான் என எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கூறியுள்ளார்.