அதிமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு
இருந்த போதிலும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுகவை விமர்சித்து வந்தாலும், அதை பொருட்படுத்தாத எடப்பாடி பழனிசாமி, தங்கள் தொடர்பு டெல்லி பா.ஜ.க தலைவர்களுடன் தான் என தெளிவுபடுத்தினார். இந்நிலையில் தான் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
அவருடன், தமிழகத்தில் இருந்து ஏ.சி.சண்முகம், ஏ.கே.மூர்த்தி, ஜி.கே.வாசன், கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன், தேவநாதன் யாதவ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். மேலும் பிரதமர் மோடி தமிழகத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட இருப்பதாக திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. எனவே தேர்தல் வெற்றிக்கு அதிமுகவின் பங்கு முக்கியம் என்பதால் எடப்பாடிக்கு முக்கியத்துவம் அளித்ததாக கூறப்படுகிறது.