ஆனால், இந்த திட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எங்கள் ஆட்சி அமைந்ததும் பேனா நினைவு சின்னம் இடிக்கப்படும் என கூறிவந்தார். கடும் எதிர்ப்புகள் மத்தியில் நினைவுச் சின்னத்திற்கு அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு தமிழக அரசின் பொதுப்பணித் துறையானது கடிதம் அனுப்பியிருந்தது.