கே.எஸ்.அழகிரியின் தீவிர ஆதரவாளரின் மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு! என்ன காரணம்? அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்.!

Published : Jul 15, 2023, 07:34 AM IST

திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து கே.எஸ்.அழகிரியின் தீவிர ஆதரவாளரான செங்கம் ஜி.குமார் அப்பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 

PREV
13
கே.எஸ்.அழகிரியின் தீவிர ஆதரவாளரின் மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு! என்ன காரணம்? அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்.!

தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி தற்போது வரை இருந்து வருகிறார். இதனிடையே, புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகள் ஒருபக்கம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் பலரது பெயர்கள் பரிசீலனையில் உள்ளது. 

23

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ்  தலைவராக செங்கம் ஜி.குமார் செயல்பட்டு வந்தார். இவர் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் தீவிர ஆதரவாளரும், அவரது வலது கரமாக செயல்பட்டு வந்தார். 

33

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து செங்கம் ஜி.குமார் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவரை பதவியில் இருந்து நீக்கி காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆனால், அவர் எதற்காக நீக்கப்பட்டார் என்ற காரணம் இதுவரை தெரியவில்லை. இவர் பதவி பறிக்கப்பட்டது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories