அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரை தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது. அந்த கையோடு அதிமுகவில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் மீண்டும் கட்சியில் சேருவதாக இருந்தால் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மன்னிப்பு கடிதம் வழங்கி மீண்டும் கழகத்தில் சேருபவர்கள் மட்டுமே, கழக உறுப்பினர்களாகக் கருதப்படுவர் என தெரிவிக்கப்பட்டது.