இந்நிலையில், மதுபான விற்பனை குறைந்தது தொடர்பாகவும், அதிக விலைக்கு மது விற்பனை தடுப்பது, பிரச்சனைக்குரிய கடைகளை மூடுவது, சிசிடிவிக்கள் பொருத்துவது, கணினி வழி ரசீது, கட்டுப்பாட்டு அறை அமைப்பது உள்ளிட்டவை குறித்து தலைமைச் செயலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது. இதில், உள்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.