ராஜராஜ சோழன் கலைஞர்.. ராஜேந்திர சோழன் ஸ்டாலின்.. அமைச்சர் அன்பில் மகேஷ் புகழாரம்!

First Published Jul 16, 2023, 7:00 AM IST

ராஜராஜ சோழன் (கலைஞர்) அண்ணா நூற்றாண்டு நூலகத்தை எழுப்பினார், ராஜேந்திர சோழன்(மு.க.ஸ்டாலின்) கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை எழுப்பினார் என்று சொன்னாலே போதுமானதாக இருக்கும் என அமைச்சர் அன்பில் பேசியுள்ளார். 

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாள் விழாவில், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார். இதனையடுத்து மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 2.73 ஏக்கர் நிலத்தில் 7 தளங்களுடன், அதிநவீன வசதிகளுடன் ரூ.215 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது. 

இந்நிலையில் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நூலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார். பின்னர் நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ஹெச்.சி.எல் குழுமத் தலைவர் ஷிவ் நாடார் மற்றும் ரோஷினி நாடார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் பேசிய அவர் ராஜராஜ சோழன் (கலைஞர்) அண்ணா நூற்றாண்டு நூலகத்தை எழுப்பினார், ராஜேந்திர சோழன்(மு.க.ஸ்டாலின்) கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை எழுப்பினார் என்று சொன்னாலே போதுமானதாக இருக்கும் என அமைச்சர் அன்பில் பேசியுள்ளார். 

click me!