அதிமுக ஐடி பிரிவு நிர்வாகிகள் மாற்றம்
ஓபிஎஸ்- இபிஎஸ் இணைந்து சுமார் 3 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி தொடர்ந்த நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு மீண்டும் ஒற்றை தலைமை மோதல் காரணமாக கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் இபிஎஸ்- ஓபிஎஸ் அணி என தனி அணியாக செயல்பட்டு வருகிறது. இதனையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, பல ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்து வந்த மாவட்ட செயலாளர்கள் மாற்றப்பட்டும், புதிய மாவட்ட செயலாளர் பதவியிடங்களையும் உருவாக்கினார்.
மேலும் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மாற்றி அமைக்கப்பட்டு,அந்த பிரிவின் செயலாளராக ராஜ் சத்யனும், தலைவராக சிங்கை ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது சிங்கை ராமச்சந்திரன் மட்டும் வரவில்லை.