அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யநாராயணன், சென்னை தி.நகர் தொகுதியில் 2016 முதல் 2021 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்த நிலையில் 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட போது தாக்கல் செய்த வேட்பு மனுவில், தனது சொத்து மதிப்பு 2 கோடியே 78 லட்சம் ரூபாய் என கூறியதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சத்யநாராயணன் சொத்து மதிப்பை கேட்டபோது,
அவரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு 13 கோடியே 2 லட்சம் ரூபாய் என தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக மனுவில் கூறியுள்ளார். இதனையடுத்து இரண்டு மாத காலத்தில் தி நகர் சத்யா தொடர்பான வழக்கு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாகத்தான் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.