அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது
அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பல கட்டங்களைக் கடந்த பிறகு உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கானது விசாரணைக்கு வந்த போது இரண்டு மாதத்தில் இந்த வழக்கை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. இதனை அடுத்து அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடுகளில் சோதனை மேற்கொண்டு கடந்த ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தது. அப்போது செந்தில் பாலாஜிக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.