கருணாநிதி குடும்பம் என்ன அரச குடும்பமா..? பதவிகளை பட்டா போட்டு வைத்திருக்கிறார்களா..? இபிஎஸ் சரமாரி கேள்வி..!

Published : Oct 10, 2025, 07:33 PM IST

‘‘கருணாநிதி குடும்பம் என்ன அரச குடும்பமா? பதவி அவர்களுக்கு பட்டா போட்டு வைக்கப்பட்டிருக்கிறதா..? அதிமுகவில் தான் சாதாரண தொண்டன் கூட முதல்வர் ஆகலாம், பொதுச்செயலாளர் கூட ஆகலாம். திமுகவில் வரமுடியுமா?’’ என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

PREV
14

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரத்தில் மொடக்குறிச்சி தொகுதியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘‘2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தனது தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டார். அவற்றில் 10% கூட நிறைவேற்றவில்லை, ஆனால் 98% நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலினும், அமைச்சர்களும் பச்சை பொய் சொல்கிறார்கள்.

100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் என்றார், சம்பளம் உயர்த்தப்படும் என்றார், ஆனால் செய்யவில்லை. சம்பளம் உயர்த்துவோம் என்றனர் அதையும் செய்யவில்லை. தொழிலாளிகளுக்கான சம்பளத்தையே அதிமுக தான் மத்திய அரசிடம் போராடி வாதாடி, முதற்கட்டமாக 2999 கோடி ரூபாய் பெற்றுக்கொடுத்தது. ஆட்சியில் இருப்பது திமுக, ஆனால் நிதி பெற்றுக்கொடுப்பது அதிமுக. ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி மக்களுக்காக உழைக்கும் ஒரே இயக்கம் அதிமுக தான்.

24

எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் விற்பனை அமோகம். கஞ்சா விற்காத இடமே இல்லை. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரே ஆண்டில் போதைப் பொருளை கட்டுப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி என்ற முறையில் பலமுறை வலியுறுத்தினோம், ஆனால், நடவடிக்கை எடுக்காததால் தங்குதடையின்றி விற்கிறது. இளைஞர்கள், மாணவர்கள் சீரழிகிறார்கள். இதற்குக் காரணம் ஸ்டாலின் அரசாங்கம்தான். நம் குழந்தைகள் நம் கண் முன்னே சீரழிகிறார்கள்.

இன்றைய தினம் தொலைக்காட்சி வாயிலாக போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்று கோரிக்கை வைக்கிறார். நாங்கள் சொன்ன நேரத்திலே நடவடிக்கை எடுத்திருந்தால் நம் பிள்ளைகளைக் காப்பாற்றி இருக்கலாம். சீரழிந்த பின்னர் இப்படிச் சொல்வது என்ன நியாயம்? திறமையற்ற பொம்மை முதல்வர், என்ன செய்வதென்று அறியாமல் நாட்டை ஆள்கிறார். நாடு என்றால் தலைமைப் பொறுப்பில் உள்ள முதல்வர் பிரதான எதிர்க்கட்சியின் சொல்லைக் கேட்டிருந்தால் கட்டுப்படுத்தியிருக்கலாம். அப்படியில்லாததால் இந்தியாவிலேயே அதிக போதைப் பொருள் விற்கும் மாநிலமாக மாறிவிட்டது.

34

ஸ்டாலின் அவர்களே திட்டமிட்டு அவதூறு செய்தி பரப்புகிறீர்கள். ஆனால், ஒன்றும் நடக்காது. அதிமுக ஆட்சி பற்றி பேசுங்கள், பதில் சொல்லத் தயாராக இருக்கிறோம். எங்களுக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை, ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. எப்போது பாஜகவோடு கூட்டணி வைத்தோமோ அன்றே பயம் வந்துவிட்டது. இது எங்கள், கட்சி நாங்கள் யாருடனும் கூட்டணி வைப்போம். நீங்கள் ஏன் பதறுகிறீர்கள்..? திமுக, கூட்டணிக் கட்சிகளும் பதறுகின்றன. ஆக பயம் வந்துவிட்டது. எதைப் பேசுவது என்றே தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

44

கருணாநிதி குடும்பம் என்ன அரச குடும்பமா? பதவி அவர்களுக்கு பட்டா போட்டு வைக்கப்பட்டிருக்கிறதா..? அதிமுகவில் தான் சாதாரண தொண்டன் கூட முதல்வர் ஆகலாம், பொதுச்செயலாளர் கூட ஆகலாம். திமுகவில் வரமுடியுமா? அப்படிப் பேசினால் கட்டம் கட்டிவிடுவார்கள். மக்களுக்கு உழைக்கும் தலைவர்களாக எம்ஜிஆர் அம்மா இருவரும் இருந்தனர். அவர்களுக்கு வாரிசு கிடையாது மக்கள் தான் வாரிசு. என்னென்ன திட்டத்தை கொடுக்க முடியுமோ கொடுத்தனர். அதிக நாள் ஆண்ட கட்சி அதிமுக கட்சி. தமிழகம் இந்தியாவிலேயே உயர்வு பெற்ற மாநிலமாக இருப்பதற்குக் காரணம் அதிமுக கட்சிதான்’’ எனத் தெரிவித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories