ஆம்ஸ்ட்ராங் வழக்கு, கரூர் சம்பவம், கிட்னி திருட்டு..! ஒரே நாளில் மூன்று பின்னடைவு..! தமிழக அரசை துரத்தும் நீதி..!

Published : Oct 10, 2025, 07:12 PM IST

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, கரூர் சம்பவம், கிட்னி திருட்டு வழக்கு மூன்று முக்கிய வழக்குகள் தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளன. மூன்று உத்தரவுகளும் ஒரே நாளில் வந்ததால், திமுக அரசுக்கு அரசியல் ரீதியாக பெரும் சவாலாக மாறியுள்ளன. 

PREV
14
மூன்று முக்கிய வழக்குகளால் தமிழக அரசுக்கு பின்னடைவு

இன்று நீதிமன்றத்தில் நடந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம், கிட்னி திருட்டு வழக்கு மூன்று முக்கிய வழக்குகள் தமிழக அரசுக்கு பெரும் அழுத்தத்தையும், பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளன. தமிழக அரசுக்கு இந்த மூன்று உத்தரவுகளும் ஒரே நாளில் வந்ததால், திமுக அரசுக்கு அரசியல் ரீதியாக பெரும் சவாலாக மாறியுள்ளன.

இதுகுறித்து தமிழகன் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, ‘‘திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கும், அரசியல் காழ்ப்புணர்வுக்கும், மாண்புமிகு உச்சநீதிமன்றமும், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையும், இன்று தகுந்த பாடம் கற்பித்திருக்கிறார்கள்.

24
வெட்கக்கேடான திமுகவின் நிபந்தனைகள்

திமுக எம்எல்ஏவுக்குச் சொந்தமான மருத்துவமனைகளுடன் தொடர்புடைய கிட்னி திருட்டு குறித்து விசாரிக்க, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் அமைக்கக் கூறிய சிறப்புப் புலனாய்வுக் குழுவில், தாங்கள் பரிந்துரைக்கும் அதிகாரிகளையே நியமிக்க வேண்டும் என்ற திமுக அரசின் நிபந்தனையை ஏற்க மறுத்து மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பில் தலையிட, மாண்புமிகு உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. திமுக எம்எல்ஏவுக்கு எதிரான விசாரணைக் குழுவில், திமுக அரசு பரிந்துரைக்கும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்ற திமுகவின் நிபந்தனை எவ்வளவு வெட்கக்கேடானது.

34
தமிழக அரசை கண்டித்த உச்ச நீதிமன்றம்

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகிய திமுகவுக்கு, அந்த வழக்கிலும் பின்னடைவே ஏற்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தடை செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், சிபிஐ விசாரணைக்கு திமுக அரசு ஏன் பயப்படுகிறது?

கரூர் தவெக பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கில், தமிழக அரசை உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு மதுரை பெஞ்சில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அதை எவ்வாறு விசாரித்தது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

44
திமுகவைத் துரத்தும் நீதியும், தர்மமும்..!

திருப்பரங்குன்றம் வழக்கில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளில், இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்புக்குப் பிறகு, 3வது நீதிபதியான நீதியரசர் விஜய் குமார், நீதியரசர் ஸ்ரீமதியின் கருத்துக்களுடன் உடன்பட்டு, சிக்கந்தர் தர்காவில், விலங்குகளை பலியிடுவதைத் தடை செய்துள்ளார். இந்த மலையை திருப்பரங்குன்றம் மலை என்றே தொடர்ந்து அழைக்க வேண்டும்.

ஒரே நாளில், டெல்லி முதல் மதுரை வரை, திமுகவின் மனசாட்சியை விட வேகமாக, நீதியும் தர்மமும் திமுகவைத் துரத்திக் கொண்டிருக்கின்றன’’ எனத் தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories