கரூர் கூட்டத்திற்கான ஏற்பாட்டில் இருந்து, கூட்டத்திற்கு அனுமதி வாங்கிய வரைக்கும் புஸ்ஸி ஆனந்திடம் கேட்க வேண்டிய கேள்விகளை சிறப்பு விசாரணைக் குழுவும் தயார் செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. கரூர் விவகாரத்தில் புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டு போலீஸ் விசாரணை செய்தால் பல தலைப்புச் செய்திகள் வரும் என பேசிக்கொள்கிறார்கள். விஜய் கரூருக்கு ஏன் வந்தார்? என்றும் தாமதமாக வந்ததில் ஏதோ உள்நோக்கம் இருக்குமா? என்றும் புஸ்ஸி ஆனந்திடம் போலீஸ் தரப்பில் கேட்க உள்ளார்கள்.
விஜயின் ஜனநாயகன் படத்தில் புஸ்ஸி ஆனந்தும் நடித்து வருவதால் ஜனநாயகன் திரைப்படத்துக்கும், கரூருக்கு வந்த கூட்டத்திற்கும் தொடர்பு இருக்கிறதா? என்றும் அந்த படத்திற்காக ட்ரோன் கேமராவில் படப்பிடிப்பு நடத்தினார்களா? என்றும் புஸ்ஸி ஆனந்திடம் விசாரணை நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.