ஜெர்மனிக்கு செல்லும் முன், ‘‘புதிய வாக்காளர்களை கட்சிக்காக கொண்டு வந்து சேர்க்க வேண்டும். அதுதான் உங்களுக்கு நான் கொடுத்திருக்கிற அசைன்மெண்ட்’’ என உடன்பிறப்புகளுக்கு உத்தரவு போட்டு சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். எங்கள் கட்சியின் புதிய வாக்காளர்களுடைய எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.
அதற்கு காரணம், திமுக கூட்டணிக்குள் பெரும் சலசலப்பு எழுந்துள்ளதாக கூறுகிறார்கள். ‘‘நாங்கள் கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் 25 தொகுதிகளைப் பெற்று 18 எம்.எல்.ஏ.,க்களையும் வெற்றி பெற்றது காங்கிரஸ் கட்சி. இப்போது இந்தத் தேர்தலிலும் அதே தொகுதிகளை காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கிறது. ஆனால், திமுகவிலோ ஏன் இரண்டு முறை காங்கிரஸுக்கு ஒதுக்கிய தொகுதிகளை மறுபடியும் அவர்களுக்கு ஒதுக்க வேண்டும்? அங்கெல்லாம் நாம கட்சி நடத்தனுமா? வேணாமா? அந்த தொகுதிகளில் கட்சிக்காக உழைத்த நாமெல்லாம் எப்போது அதிகாரத்துக்கு வருவது? அதனால் காங்கிரஸுக்கு மறுபடியும் அந்த தொகுதிகளை ஒதுக்கக் கூடாது’’ என பல்வேறு மாவட்ட செயலாளர்கள், திமுக நிர்வாகிகள் எல்லாம் எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது.