விஜய், தவெகவை தொடங்கியது முதலே பாஜகவை தனது கொள்கை எதிரி என அழுத்தமாக விமர்சித்து வருகிறார். பல்வேறு சந்தர்ப்பங்களில் பாஜகவை நேரடியாகவே கடுமையாக சாடியுள்ளார். ஆனால், திமுகவினரும், குறிப்பாத விசிக தலைவர் திருமாவளவன், ‘‘விஜயை பாஜக அரசியல் கருவியாக பயன்படுத்துகிறது என்றும், தவெகவில் சங்க பரிவார் அமைப்பினர் ஊடுருவி, சமூகநீதி அடிப்படையிலான அரசியலை புகுத்துகிறார்கள் என்றும் குற்றம்சாட்டி வருகிறார். கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து, பாஜக, ஆர்எஸ்எஸ் தமிழகத்தில் அரசியல் பலம் பெறுவதற்காக விஜய்யை பயன்படுத்த முயல்கிறார்கள் என்று திருமாவளவன் எச்சரிக்கை விடுத்தார். இதற்கு காரணம், தவெகவை தனியாக களமிறக்கி சிறுபான்மை வாக்குகளை பிரிப்பதற்கான முயற்சி என்றும் கூறிவருகிறார்.