திமுக கூட்டணியில் ஓ.பி.எஸ் தரப்புக்கு 4 சீட்டுக்களும் ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதுறித்து அரசியல் விமர்சகர் ஆவின் வைத்தியநாதன் பேசுகையில், ‘‘ஓ.பன்னீர்செல்வம், தமிழக முதல்வர், மு.க.ஸ்டாலினை ஓரிரு முறை சந்தித்துப் பேசினார். இப்போது திமுகவுடன் டீல் முடிந்துவிட்டது. நான்கு தொகுதிகள் பேசி முடிக்கப்பட்டு விட்டது. ஒரு ராஜ்யசபா கேட்டிருக்கிறார்கள். தொகுதி எல்லாம் பேசி முடித்து விட்டார்கள். எக்காலத்திலும் எடப்பாடி, பிஜேபி, தவெகவுக்கு ஆதரவு கொடுத்து விடக்கூடாது என்று ஸ்டாலின், ஓ.பி.எஸுக்கு நிபந்தனை விடுத்துள்ளார்.
ஓபிஎஸ் அணி தவெக பக்கம் போய் விடக்கூடாது என ஸ்டாலின் திட்டவட்டமாக இருக்கிறார். அப்படிப்போனால் தவெக ஆட்சி அமைக்கும் அளவுக்கு பலம் பொருந்திய இயக்கமாக மாறிவிடும் என நினைத்த ஸ்டாலின், ராஜதந்திரத்தால் ஓ.பிஎஸை இழுத்துவிட்டார். ஓபிஎஸ் உடன் இருப்பவர்களுக்கு 4 சீட், அவரது மகன் ரவீந்திரநாத்துக்கு ராஜ்யசபா சீட் கேட்டிருக்கிறார்கள்.