இந்த நிலையில் தற்போது 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலையொட்டி மீண்டும் அதிமுக- பாஜக கூட்டணி ஏற்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ளாத அன்வர் ராஜா, கட்சி நிகழ்வில் பெரிய அளவில் கலந்து கொள்ளாலம் இருந்து வந்தார். இந்த சூழ்நிலையில் தான் ஜூலை 21 ஆம் தேதி சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.
அதிமுக-பாஜக கூட்டணியால் அதிருப்தி அடைந்திருந்த அன்வர் ராஜா, பாஜகவை விமர்சித்து வந்தார் மற்றும் அதிமுகவின் கொள்கைகளுக்கு மாறாக செயல்படுவதாகக் கூறி, திமுகவில் இணைய முடிவு செய்தார்.