இந்த சூழலில் தான் அன்புமணி ஆகஸ்ட் 9 அன்று மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் நடத்துவதாக அறிவித்தார். இதற்கு எதிராக, ராமதாஸ் ஆகஸ்ட் 17-ல் புதுச்சேரியில் பொதுக்குழு கூட்டம் நடத்துவதாக அறிவித்து, அன்புமணியின் கூட்டத்திற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆனால், நீதிமன்றம் இது தந்தை-மகன் இடையேயான தனிப்பட்ட மோதல் எனக் கூறி, ராமதாஸின் மனுவை தள்ளுபடி செய்து, அன்புமணியின் கூட்டத்திற்கு அனுமதி அளித்தது. இதனையடுத்து இன்று மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் பாமக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் அன்புமணியின் இருக்கைக்கு அருகில் பாமக நிறுவனர் ராமதாசுக்கு என தனி இருக்கை போடப்பட்டுள்ளது. ஆனால் இந்த பொதுக்குழு கூட்டத்தை ராமதாஸ் புறக்கணித்துள்ளார்.