சுக்கு நூறான தவெகவின் நம்பிக்கை..! உங்கள் அரசியலுக்கு நீதிமன்றம்தான் கிடைத்ததா..? கடுப்பான நீதிபதிகள்..!

Published : Oct 03, 2025, 02:37 PM IST

ஒரு அரசியல் கட்சி வந்து தமிழ்நாடு காவல்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எங்களுக்கு சிபிஐ தான் வேண்டும் என கேட்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது நீதிபதிகள் சந்தேகத்தை  எழுப்பி  உள்ளனர்.

PREV
14

கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தமிழக பாஜக மற்றும் அதிமுக, தவெக போன்ற அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சிபிஐக்கு மாற்றுவது இது போன்ற கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது போன்ற கோரிக்கைகள் கொண்ட 7 பொதுநல வழக்குகள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்குகள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

24

ஏற்கனவே அந்த கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாரய சம்பவமாக இருந்தாலும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்காக இருந்தாலும் இது போன்று அதிக முக்கியத்துவம் வாய்ந்த பலபேர் விசாரிக்கப்பட வேண்டும் என்று கருதக்கூடிய வழக்குகளில் என்று அரசியல் கட்சிகள் கேட்பது வழக்கம். அதற்கு காரணம் காவல்துறை இந்த வழக்கை விசாரித்தால் எங்களுக்கு போதுமான பதில் கிடைக்காது என்று அவர்கள் நினைப்பார்கள். தவெகவுக்கு அனுமதி கொடுத்தது காவல்துறை, பாதுகாப்பு கொடுத்தது காவல்துறை. எனவே தவெக தொண்டர்களை பொறுத்தவரையில் காவல்துறையினர் போதுமான ஒத்துழைப்பு ஆரம்ப காலத்தில் இருந்து எங்களுக்கு கொடுக்கவில்லை என்கிற வாதத்தை முன்வைத்து வருகிறார்கள்.

அதே போல அவர்கள் நாங்கள் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சிக்கு எதிராக பேசுகின்றோம் எனக்கூறி எங்களை ஒடுக்கப் பாக்கிறார்கள் என தவெக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறது. தவெகவின் நேரடி குற்றச்சாட்டு என்னவென்றால் தமிழக காவல்துறையினர் இதனை விசாரித்தால் நன்றாக இருக்காது. அந்த காவல்துறை அதிகாரிகள் விசாரித்தால் எப்படி சரியானதாக இருக்கும்? எங்களுக்கு நியாயம் கிடைக்காது, உரிய தீர்வு கிடைக்காது. அதனால், மத்திய சிபிஐ இதனை விசாரித்தால் இதில் தமிழ்நாடு காவல்துறை உட்பட அனைத்து தரப்பையும் அவர்கள் விசாரிப்பார்கள்.

34

அது ஒரு மூன்றாம் தரப்பு விசாரணை என்பதால் அவர்கள் அனைவரையும் சம நேர் கோட்டில் வைத்து விசாரிப்பார்கள். அப்போது உண்மை என்ன என்பது வெளிப்படும். ஆனால் தமிழ்நாடு காவல்துறை விசாரித்தால் அது ஒரு தலைப் பட்சமான விசாரணையாக இருக்கும் என்பது தவெகவின் குற்றச்சாட்டாக இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் சிபிஐக்கு இந்த வழக்கு மாற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். தமிழக அரசை பொருத்தவரையில் நாங்கள் நேர்மையாக அனைத்து வழக்குகளையும் விசாரித்து நடவடிக்கை எடுப்போம், எடுத்துக் கொண்டிருக்கிறோம். எனவே தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்படக்கூடிய ஒரு காவல்துறை.

எனவே நாங்களே இந்த வழக்கை விசாரித்து உரிய நியாயத்தை பெற்று தருவோம் என்று அவர்கள் தரப்பில் கூறப்பட்டது. தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட நீதிபதிகள் இறுதியில் ஒரு முடிவை எடுப்பார்கள் என்று தெரிகிறது

உங்கள் அரசியலுக்காக நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம் என்றும் கண்டிப்பது போல ஒரு பதிலை கூறியுள்ளனர்.

44

சிபிஐ விசாரணை என்று கேட்பது யார்? தமிழக அரசியல் கட்சியான தவெக. ஆனால் நீதிபதிகள் என்ன கேட்கிறார்கள் என்றால் நீங்கள் உங்கள் அரசியல் ஆதாயத்திற்காக, அரசியல் லாபத்திற்காக தமிழ்நாடு காவல்துறையை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்கிற அடிப்படையில் தெரிவித்திருக்கிறார்கள். உண்மையிலேயே இதில் சிபி விசாரணை வேண்டுமென்றால் எங்களுக்கு நியாயம் வேண்டும் என்று அந்த பாதிக்கப்பட்ட தரப்பினர் 41 பேர் உயிரிழந்த குடும்பத்தினரில் யாராவது சிபை விசாரணை கேட்கலாம். அவர்கள் மனுத்தாக்கல் செய்யாமல் ஒரு அரசியல் கட்சி வந்து தமிழ்நாடு காவல்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எங்களுக்கு சிபிஐ தான் வேண்டும் என கேட்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது நீதிபதிகள் சந்தேகத்தை  எழுப்பி  உள்ளனர்.

நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம் என்று கூறிய நீதிபதிகள் சிபிஐ விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

Read more Photos on
click me!

Recommended Stories