Smell of Rain: மழை மணம் ஏன் அனைவரையும் கவர்கிறது? மழை பெய்தவுடன் மண்ணிலிருந்து வரும் அந்த இனிய வாசனைக்கு பின்னால் இயற்கையின் சுவாரஸ்யமான அறிவியல் ரகசியம் மறைந்திருக்கிறது.
மழை பெய்ததும் மண்ணிலிருந்து வரும் அந்த வாசனைக்கு 'பெட்ரிகோர்' (Petrichor) என்று பெயர். இது ஒரு கிரேக்க வார்த்தை. 'பெட்ரா' என்றால் 'பாறை' என்றும், 'இகோர்' என்றால் 'கடவுள்களின் ரத்தம்' என்றும் பொருள். தண்ணீருக்கு இயல்பாக வாசனை கிடையாது. ஆனால், வறண்ட மண்ணில் மழைத்துளிகள் படும்போது நடக்கும் சில ரசாயன மாற்றங்களால்தான் இந்த வாசனை உருவாகிறது.
25
இந்த வாசனைக்கு காரணம்
மழை பெய்யும்போது ஏற்படும் இடி, மின்னல் காற்றில் இருக்கும் ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜன் மூலக்கூறுகளைப் பிரித்து ஓசோன் வாயுவை உருவாக்குகிறது. இந்த ஓசோன், மழைத்துளிகளுடன் கலந்து பூமியை அடையும்போது ஒரு புத்துணர்ச்சியான வாசனையை வெளியிடுகிறது. மழைக்குப் பிறகு காற்று சுத்தமாகவும், குளிர்ச்சியாகவும் உணர இதுவும் ஒரு காரணம்.
35
மண்ணில் உள்ள நுண்ணுயிரி
மண்ணில் 'ஆக்டினோமைசீட்ஸ்' (Actinomycetes) என்ற நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. கோடை காலத்தில் மண் காய்ந்திருக்கும்போது, இவை 'ஜியோஸ்மின்' (Geosmin) என்ற ரசாயனத்தை வெளியிடுகின்றன. முதல் மழை பெய்ததும், இந்த ஜியோஸ்மின் காற்றில் கலந்து நமக்கு அந்த மண் வாசனையைத் தருகிறது.
கடும் வெயில் காலங்களில், சில செடிகளும் மரங்களும் தங்களது ஈரப்பதத்தைத் தக்கவைக்க ஒருவித எண்ணெயை வெளியிடுகின்றன. இந்த எண்ணெய் பாறைகளிலும், மண்ணிலும் சேமிக்கப்படுகிறது. மழை பெய்யும்போது, இந்த எண்ணெயுடன் தண்ணீர் கலப்பதால் மண் வாசனை இன்னும் அதிகமாகிறது. இதனால்தான், பசுமையான இடங்களில் மழை வாசனை இன்னும் அதிகமாக இருக்கும்.
55
இந்த வாசனை நமக்கு ஏன் இவ்வளவு பிடிக்கும்?
ஆக, மழைக்குப் பின் வரும் மண் வாசனை என்பது ஓசோன், மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் வெளியிடும் ஜியோஸ்மின், மற்றும் தாவரங்களின் எண்ணெய் ஆகியவற்றின் கலவையே. இதனால்தான் முதல் மழை தரும் மண் வாசனை நம் மனதிற்கு இதமாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கிறது. இது இயற்கை நமக்கு தரும் ஒரு அற்புதமான அனுபவம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.